அன்பை விதையுங்கள் அதையே அறுவடை செய்வீர்கள்

*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.*
*பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்…..*
*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,*
*இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று…..*
*அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.*
*உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு…,*
*இல்லையேப்பா..,*
*நல்லா தானே இருக்கு” என்பார்.*
*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.*
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,
ஏங்க..
*”பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு”….!!*
*”என் தினமும் இப்படி நல்லா இல்லைனு*
*சொல்லி டிராமா போடறீங்க”*
உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்…..,
*”அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க”….!!*
ஆனாலும்…,
*”தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க”…..!!*
நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்…..,
*” தினம்*
*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்”……!!*
*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு……,*
அந்த பாட்டியிடம்,
*”அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்”…..!!*
*”இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்”….?*
உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு….,
*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி….,*
*”கொடுத்து சாப்பிட வைக்கிறான்”……!!*
*இது எனக்கு தெரியாது என்று*
*நினைக்கிறான்…!!*
*”நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை”..!!*
மாறாக…
*” அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது”…*
என்றார் அன்போடு….,
*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்*
*ஜீவன் இன்னும் இருக்கு…..!!*
*”அன்பை விதையுங்கள்”….!!*
*”அதையே அறுவடை செய்வீர்கள்”…….!!*
Recent Comments