வாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள்

அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.
முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்
“வெளியே குளிர் உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?
முதியவர் பதிலளித்தார்,
” எனக்கு சூடான உடைகள் இல்லை , ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்பட்டுள்ளேன் “
கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்
“நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான்
உங்களுக்கு ஆடை தருகிறேன்”
அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவன் காத்துக்கொண்டிருந்தான். அந்த
மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.
காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.
அந்த மனிதன் கையில் எழுதப்பட்டுள்ளது ” எனக்கு சூடான உடைகள் இல்லாத போது, நான்
குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான்
குளிர்க்கு எதிராக போராடும் திறனை
இழந்துவிட்டேன்.”
வாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று. அது இன்னொருவரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம்.
Recent Comments